கொவிட்−19 வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலப் பகுதியில், சட்டவிரோத மதுபான (கசிப்பு) பாவனை அதிகரித்துள்ளதாக பொலிஸார் மற்றும் கலால்வரித் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய ,தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள காலப் பகுதியில், மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ளமையே, இந்த சட்டவிரோத மதுபான பாவனை அதிகரிக்க காரணம் என தெரிய வந்துள்ளது. குறித்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த காலப் பகுதியில் மாத்திரம் மதுபான பிரியர்களினால், 240 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான சட்டவிரோத மதுப…
நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் நாட்டின் தற்போதைய நிலையில் பொருட்களின் விலை குறையாது. குறைக்கவும் முடியாது. மக்கள் தற்காலிக நெருக்கடி நிலைமைகளை சமாளிக்க பழகிக்கொள்ள வேண்டும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். எந்த நேரத்தில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும், எப்போது மருந்து தட்டுப்பாடு ஏற்படும் என்பதே தெரியாத அச்சுறுத்தல் நிலையில் உள்ளோம் எனவும் அவர் கூறினார். நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு ஏற்படப்போவதாக பொருளாதார நிபுணர்கள், அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக…
பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக 200 வீடுகளை நிர்மாணிப்பதற்கான யோசனை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீட்டுத் திட்ட அமைச்சர் என்ற வகையில் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்மொழியப்பட்ட யோசனையில் வியத்புர வீட்டுத்திட்டத் திலிருந்து வீடுகளை வழங்குவதுடன் மாதிவெல பகுதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் குடியிருப்புகளில் மேலும் 200 வீடுகளை நிர்மாணிக்கத் தீர்மானித்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாக உழைப்பவர்களுக்கான செய்தி இலங்கையில் மாதம் ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிப்பவர்களுக்கு 5% வரி விதிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி ,இந்த வரி கல்வி மற்றும் சுகாதார போன்ற சமூக நல நடவடிக்கைகளுக்கு பயன்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் , ஏராளமான இலங்கையர்கள் தங்கள் குழந்தைகளுக்காக சர்வதேச பாடசாலைகளில் சேர்த்து அதற்காக பணம் செலுத்துகின்றனர். அதேபோல், தனியார் மருத்துவமனைகளிலும் பலர் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்கிறார்கள். மேலும் ,அவர்களும் உரிய…
மனித உரிமைகளை பாதுகாக்கும் விவகாரத்தில் இலங்கை இன்னமும் ஆக்கபூர்வமாக நடக்கவில்லை என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்லே தெரிவித்துள்ளார். இதன்படி ,மனித உரிமை பேரவையின் 48வது அமர்வு இன்று ஆரம்பமாக நிலையில், ஆணையாளர் இலங்கை தொடர்பிலான வாய்மூல அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ,பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும், அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை துன்புறுத்தக்கூடாது, மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கை குறித்து கவனம் செலுத்த வேண்டும், அவசர கால விதிமுறைகளில் சிவில் நிர்வாகத்திற்குள் இர…
மலையாள சீரியல் நடிகை நிமிஷா கோவிலுக்கு சொந்தமான படகில் ஏறி புகைப்படம் எடுத்துக்கொண்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக கேரளாவில் கோவில்கள் அதிகம். அதோடு, கோவில் பாரம்பரியத்தை போற்றும் வகையில் அந்தந்த கோவிலுக்கு சொந்தமாக நீண்ட பாம்பு வடிவிலான படகுகள் உள்ளன. இந்த படகுகளை கேரள மக்கள் புனிதமாக கருதுகின்றனர். அதன்படி, அரன்முலா கோயிலுக்கு சொந்தமான பாம்பு வடிவிலான படகில் கோவில் விதிகளை மீறி பிரபல மலையாள நடிகை நிமிஷா பிஜோ புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் காலில் செருப்பும் அணிந்து கொண்டிருந்தார். நிமிஷா அவர்களின் …
அமெரிக்காவின் பிரசித்திப்பெற்ற இரட்டைக் கோபுரம், பென்டகன் போன்ற கட்டிடங்களை கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி விமானத்தை மோதவிட்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதன் பிறகு கடுங்கோபத்திற்கு ஆளாகிய அமெரிக்கா, தன் ராணுவ படைகளை கொண்டு பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டது. இந்த தாக்குதலுக்கு காரணமான அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் உள்பட முக்கிய பயங்கரவாத தலைவர்கள் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவமும் அமெரிக்கா ஆப்கானுக்கு நுழைய காரணமாகவும் இருந்தது. மேலும், அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் அய்மன் அல்-ஜவாஹ…
இலங்கையில் “கருப்பு பூஞ்சை” தொற்றுக்கு உள்ளான பல நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி ,நீண்ட நேரம் முகக்கவசங்களை அணிவதால் கருப்பு பூஞ்சை நோய் பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒரே முகக்கவசத்தை மற்றும் அழுக்கு முகக்கவசத்தை நீண்ட நேரம் அணிந்திருப்பது கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த நிலையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சிறுநீரக கோளாறு காரண…
நாட்டில் கடந்த 9 மாத காலப்பகுதியில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி ,இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 12 ஆயிரத்து 102 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதில் சுமார் 39 தசம் 8 வீதமான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இருந்து 4 ஆயிரத்து 828 டெங்கு நோயாளர்கள் பத…
இலங்கை மத்திய வங்கி ஆளுநர் பதவியை ஏற்பதற்காக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார். இதன்படி ,எம் பி பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை இன்று காலை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்தார் கப்ரால். மேலும் ,இந்த எம் பி பதவிக்கு ஜயந்த கெட்டகொட நியமிக்கப்படவுள்ளார். கெட்டகொடவுக்கு பிரதியமைச்சு பொறுப்பொன்று வழங்கப்படவுள்ளது.